News

விநாயகர் துதி-3

சொந்தமெல்லாம் கூடினோம்
      சோகத்தைப் போக்கினாய்!
பச்சரிப் பொங்கல் வைத்தோம்
      பார் புகழ வாழ வைத்தாய்!
அலங்காரம் செய்து பார்த்தோம்
      ஆனந்தமாய் வாழ வரமளித்தாய்!
அடுத்தடுத்த காரியங்கள்
      அனைத்தனைத்தும் வெற்றியாய்!
அரவணைத்துக் காத்திடுவாய்
      அகிலம் போற்றும் சிவந்தி விநாயகனே!

                         -  சிவந்தி விநாயகர் துதி
பாடலாசிரியர்-A.தங்கமயில்

1 கருத்து: